Tags:
“மதம் மனிதனை மனிதனாக்குகிறது: நம்பிக்கை நல்வாழ்வை நவிழ்கிறது” என்ற வாழ்வியலோடு ஒன்றிணைந்து செல்ல விரும்பினால் மதம் மற்றும் நம்பிக்கை எவ்வாறு தோன்றியது என்ற மிகப்பெரிய பெருங்கடலில் நீந்தியே ஆகவே வேண்டும். ஆம் உண்மையில் இவற்றின் தோற்றம் எப்போது? ஏங்கே? யாரால்? ஏவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது?. என்ற வினாக்களுக்கு விடை காண முற்பட்டால்: உலகில் நதிக்கரை நாகரீகங்களான சிந்து நதிக்கரை நாகரீகம், மொசபத்தேமிய நாகரீகம், நைல் நதிக்கரை நாகரீகம் மற்றும் குவாங்கோ நாகரீகம் போன்றவற்றின் தோற்றத்தோடு உலக மக்களின் மதம், நம்பிக்கை, கலை-கலாசாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் விழுமியங்களின் தோற்றமும் உதயமானது.
ஒவ்வொரு நதிக்கரையும் அண்டிய வாழ்ந்த மக்கள் அங்கே காணப்பட்ட இயற்கை அம்சங்களை கொண்டு தனக்கே உரித்தான நாகரீகமொன்றை வளர்த்துக் கொண்டனர் அவையே வெவ்வேறு பரிமாணங்களுடனான மதங்களாக இன்று உருப்பெற்றுள்ளன. அவ்வகையில் இன்று உலகில் 4000 வரையான மதங்கள் காணப்படுவதுடன் அதில் 75 சதவீதமானோர் 05 பிரதான மதங்களான பௌத்த மதம், இந்து மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம் மற்றும் இஸ்லாம மதத்தை பின்பற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன(உலக மததினம், 2023). இவ்வாறு ஒவ்வொரு மதத்தினரும் தன்க்கே உரித்ததான கடவுள்களை பிரதானமாக கொண்டு அவர் அவர் மதத்தினை பின்பற்றி வருகின்றனர்.
மேற்கண்டவாறு மதம் மற்றும் நம்பிக்கையின் தோற்றப் பரம்பல்கள் அமைய இதனுடன் மதம் மற்றும் நம்பிக்கை மிதான சுதந்திரம் என்ற எண்ணக்கரு என்றால் என்ன?, அது எவ்வாறு தோன்றியது? இதன் தோன்றுவாய்க்கு ஏதுவான காரணிகள் என்ன?, அதன் பின்புலம் என்ன? என்பன தொடர்பாக இனி விரைவாக ஆராய்வோம்.
மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் என்றால் என்ன?
மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் என்பது தனிநபர்கள் அல்லது சமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். பல நாடுகளை சார்ந்த, மக்கள் மதச்சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்று என கருதுகின்றனர். அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் என்பது, அரசு பிற மதங்களையும் பின்பற்றவும் கைக்கொள்வதற்கும் அனுமதிப்பதுடன் சார்ந்தவையாக கருதப்படுகின்றது. மேற்கண்டவாறு மதம் மற்றும் நம்பிக்கை மீதான சுதந்திரம் அமைய அது பின்வரும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்டுள்ளது
மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் – வரலாற்றுப் பின்னணி
மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமானது வரலாற்றுடன் பலமான உறவை கொண்டுள்ளமையை காண முடிந்தது. அதனை பின்வரும் உப தலைப்புக்கள் ஊடாக தெளிவாக ஆராய்வோம்.
நாகரீகங்களும் : மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமும்
அதனடிப்படையில்; மதச்சுதந்திரத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்று பண்டைய மெசபத்தேமியாவில் இருந்து அறியப்படுகிறது, அங்கிருந்த ஹமுராபி எனும் சட்டத்தொகுப்பானது கிமு 1754 இல், மத நடைமுறைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்ததுடன் இந்த சட்டமானது மத நம்பிக்கைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததுடன், தனிநபர்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கான உரிமையையும் வழங்கியுள்ளது. அதேப்போல பண்டைய கிரேக்கர்கள் தங்கள் பலதெய்வ நம்பிக்கைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், கிரேக்க நகர-மாநிலங்களுக்குள், தனிநபர்கள் த னக்கு விருப்பமாக மத நடைமுறைகளை மதிக்கும் மதச்சுதந்திரம் இருந்துள்ளது.
அதேப்போன்று ரோமானியப் பேரரசும் மதச்சுதந்திரத்திற்கு மிகவும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில், ரோமானியர்கள் தங்கள் பரந்த சாம்ராஜ்யத்திற்குள் பரந்த அளவிலான மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை பொறுத்துக்கொண்டனர். இருப்பினும், பேரரசு விரிவடைந்து வெவ்வேறு கலாச்சாரங்களை சந்தித்ததால், மோதல்கள் எழுந்தன. ரோமானியர்கள் அனைத்து குடிமக்களும் மாநில மதத்தில் பங்கேற்க வேண்டும் என்று சமூக ஒழுங்கை பராமரிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் உள்ளுர் தெய்வங்களை வழிபட அனுமதித்தனர். இந்த அணுகுமுறை ஒரு குறிப்பிட்ட அளவிலான மத பன்முகத்தன்மையை அனுமதித்தது,
மேற்குறிப்பிட்டவகையில் நாகரீகங்களுடனான மத மற்றும் நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் வரலாற்றுப் பரம்பல் அமைகிறது.
இஸ்லாமிய உலகமும் : மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமும்
கி.பி 620ல் இஸ்லாமியர்கள், யூதர்கள் மற்றும் பேகன்கள் ஆகியோர்க்கு மதச்சுதந்திரத்தை மதீனாவின் அரசியலமைப்பில் முஹம்மது என்பவர் அறிமுகப்படுத்தினார். ஆரம்பகால முஸ்லீம் வரலாற்றில் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் அரசில் இருந்து பிரிந்து செல்லும் நிலையைப் பேணியமையானது மதச்சுதந்திரத்தின் சில கூறுகளை நிறுவ உதவியது. இஸ்லாம் அல்லாத சமூகங்கள் திம்மி அந்தஸ்தை ஏற்றுக்கொள்வது மற்றும் முஸ்லீம் குடிமக்கள் செலுத்தும் தானத்திற்கு பதிலாக அவர்களின் வயது வந்த ஆண்கள் ஜிஸ்யா வரியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இஸ்லாமிய கலிபா பின்னர் மதசுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்ததுள்ளது. அதன் விளைவு திம்மிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதே அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை என்றாலும், சொத்து, ஒப்பந்தம் மற்றும் கடமை ஆகிய சட்டங்களின் கீழ் அவர்கள் சமத்துவத்தை அனுபவித்தனர்.
இந்தியத் துணைக் கண்டத்தின் ஆரம்பகால கலிபாவில் காணப்பட்டதைப் போல, கிறிஸ்தவம், யூதம் மற்றும் இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களின் மதச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் பொதுவாக இஸ்லாமிய சட்டக் கட்டமைப்பிற்குள் இடமளிக்கப்பட்டதால், பாரம்பரிய இஸ்லாமிய நெறிமுறைகள் மற்றும் மத பன்மைத்துவம் இருந்தது. மேற்குறிப்பிட்டவகையில் இஸ்லாமிய உலகுடனான மத மற்றும் நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் வரலாற்றுப் பரம்பல் அமைகிறது.
ஆசியாவும் : மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமும்
முக்கியமாக ஆசிய கண்டத்தில், மங்கோலியர்கள் மதங்களை பொறுத்துக் கொண்டனர். மக்கள் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் வழிபடலாம். அதேப்போல இந்தியாவில் கிமு 3ஆம் நூற்றாண்டில் அசோகர் ஆட்சியின் போது மதச் சுதந்திர ஆணைகள் எழுதப்பட்டுள்ளன. எந்தவொரு மதத்தையும் கடைப்பிடிக்கவும், பிரசங்கிக்கவும், பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம் என்பது இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு உரிமையாக உள்வாங்கப்பட்டது. அவர் பௌத்தத்தின் கொள்கைகளை ஊக்குவித்தார், இந்தியாவில் வழிபாட்டு சுதந்திரத்தின் முக்கியத்துவம் அசோகரின் கல்வெட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
பல அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்தியாவின் பிரதான மதமான இந்து மதம் நீண்ட காலமாக மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதமாக இருந்ததாக நம்புகின்றனர். வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின் நிறுவனர் ரஜனி கோத்தாரி, “இந்தியா ஒரு நாகரிகத்தின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு, அது அடிப்படையில் மதச்சார்பற்றது.” என்றார்.
“பூர்வீக மதங்களான இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் மட்டுமல்ல, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமும் இங்கு செழித்து வளர்ந்துள்ளன. மத சகிப்புத்தன்மை இந்திய பாரம்பரியத்தில் உள்ளார்ந்ததாக உள்ளது” என்று தலாய் லாமா கூறியுள்ளார்.
சமகால இந்தியாவில் மதசுதந்திரம் என்பது நாட்டின் அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும். அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதங்களை அமைதியான முறையில் கடைப்பிடிக்கவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியது. மேற்கண்ட வகையில் ஆசியாவுடனான மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் வரலாற்றுப் பரம்பல் அமைகிறது.
ஐரோப்பாவும், மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமும்
1492 இல் ஸ்பெயினின் கிரனாடா நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிரனாடா உடன்படிக்கையின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு மத சுதந்திரம் உறுதியளிக்கப்பட்டது, செக் குடியரசு போஹேமியன் சீர்திருத்தத்தின் விளைவாக 1436 மற்றும் 1620 க்கு இடையில் மத சுதந்திரத்தை அனுபவித்தது, 1579ல் வடக்கு நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான போராட்டத்தில் தனிப்பட்ட மத சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. நெதர்லாந்து ஐரோப்பாவில் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட நாடாக மாறியது. பிரான்சிய புரட்சியானது அரசமதத்தை ஒழித்ததுடன் மனிதன் உரிமைகள் பிரகடனம் (1789) மதச்செயற்பாடுகள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளில் பொது ஒழுங்கை மீறாத வரை, மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
போலந்தில், 1573 ஆம் ஆண்டில் வார்சா கூட்டமைப்பின் போது முழுமையான மத சுதந்திரம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் மத துன்புறுத்தல் அன்றாட நிகழ்வாக இருந்த காலத்தில் போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் மத சுதந்திர சட்டங்களை வைத்திருந்தது. மேற்குறிப்பிட்டவகையில் ஐரோப்பாவுடனான மத மற்றும் நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் வரலாற்றுப் பரம்பல் அமைகிறது.
அமெரிக்காவும், மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமும்
1634இல் மேரிலாந்தின் மதச்சுதந்திரம் தொடர்பான “எந்தவொரு நபரும் இனிமேல் எந்த விதமான தொந்தரவும், துன்புறுத்தலும் அல்லது அவரது மதத்திற்காகவோ விலக்கு அளிக்கப்படவோ கூடாது” அரசாங்க கொள்கை முன்வைக்கப்பட்டது.
18ம் நூற்றாண்டின் 1791 இல் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம், மத சுதந்திரத்தை ஒரு அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தியது. இவ் அடிப்படை சட்டமானது “காங்கிரஸ் மதத்தை ஸ்தாபிப்பதைப் பற்றி எந்தச் சட்டத்தையும் உருவாக்காது, அல்லது அது மதம் சார்ந்து சுதந்திரமாக செயல்படுவதைத் தடை செய்கிறது.” ஏன்ற நடைமுறையை பின்பற்றியது. அதேசமயம் தனிநபர்களை அரசால் திணிக்கப்பட்ட மதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், புதிதாக உருவாக்கப்பட்ட தேசத்தில் பல்வேறு மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் வளரவும் வழிசமைத்தது.
அமெரிக்கா தனது வெளிநாட்டு உறவுகளில் மத சுதந்திரத்தை முறையாகக் பேணுகிறது. 1998ன் சர்வதேச மதச்சுதந்திரச் சட்டம், சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க நிறுவியது. இது மத சுதந்திரம் தொடர்பாக 200 க்கும் மேற்பட்ட பிறநாடுகளின் தகவல்களை ஆராய்வதுடன் மோசமான மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை பின்பற்றும் நாடுகளுக்கு பரிந்துரைகளை செய்கிறது.
மேலும் கனடாவில் மதச்சுதந்திரம் என்பது அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமையாகும், இது வரம்புகள் அல்லது குறுக்கீடுகள் இல்லாமல் ஒன்றுகூடுவதற்கும் வழிபடுவதற்குசுதந்திரத்தை அனுமதிக்கிறது. கனேடிய சட்டம் வலுவான மத நம்பிக்கைகள் கொண்டவர்களுக்கு நியாயமான தங்குமிடங்களை வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றது. மேற்குறிப்பிட்டவகையில் அமெரிக்காவுடனான மத அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் வரலாற்றுப் பரம்பல் அமைகிறது.
மேலே நாம் அடையாளப்படுத்திய வகையில் மத மற்றும் நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் வரலாற்றுப் பரம்பல் அமைகிறது. பல்தரப்பட்ட பிரச்சனைகள் மதம் அல்லது நம்பிக்கை தொடர்பாக காணப்பட்டாலும் ஏதோவொரு வகையில் அவை மனித உரிமைச்சார்ந்த சுதந்திரமாக பேணப்படுவதையும் மறுத்துவிட முடியாது. சமூக பிராணியான நாமும் மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்திதை அனுபவிப்பதோடு நிறுத்திவிடாமல் அதனை அனைவரும் அறிய செய்திடுவோம்.
திறவுச்சொற்கள்:- மதம், நம்பிக்கை, சுதந்திரம், உரிமை, ஆசியா, ஐரோப்பா, நாகரீகங்கள், அமெரிக்கா, இஸ்லாமிய உலகம்
உசாத்துணைகள்
https://www.graygroupintl.com/blog/freedom-of-religion(Accessed 20/12/2023)
https://en.wikipedia.org/wiki/Freedom_of_religion#History(Retrieved 23/12/2023)
Tags:
Shahana Vijekumaran
Feb 11, 2024
0